வட்டார செயல்பாடுகள் புகைப்படங்களாக உங்கள் பார்வைக்கு

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாகப்பட்டினம் மாவட்டம்

Friday 23 March 2012

இணையதளத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு பாடத் திட்டம்

மார்ச் 20: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://www.trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 3-ம் தேதி நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் மார்ச் 22-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புவோர் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளை எழுதலாம். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புவோர் ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளை எழுதலாம். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புவோர் இரண்டு தாள்களையும் எழுத வேண்டும்.
இந்த இரண்டு தாள்களிலும் 150 மதிப்பெண்ணுக்கு "மல்டிபிள் சாய்ஸ்" வடிவில் வினாக்கள் இடம்பெற்றிருக்கும். இதில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் பெற குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும்.
முதல் தாளுக்கு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பாடப் புத்தகங்களிலிருந்து பாடத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் தாளுக்கு 6 முதல் 12 வகுப்பு வரையான பாடப் புத்தகங்களிலிருந்து பாடத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
1 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள பாடப் புத்தகங்களை முழுமையாகப் படித்தால் இந்தத் தகுதித் தேர்வில் தேர்ச்சியடைய வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பாடத் திட்ட விவரம்: ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் குழந்தை மேம்பாடு மற்றும் கற்பிக்கும் முறை, மொழிப் பாடம் முதல் தாள், மொழிப் பாடம் இரண்டாம் தாள் (ஆங்கிலம்), கணிதம், சுற்றுச்சூழலியல் மற்றும் அறிவியல் பாடங்களிலிருந்து தலா 30 மதிப்பெண்ணுக்கான வினாக்கள் இடம்பெறும்.
இரண்டாம் தாளில் குழந்தை மேம்பாடு மற்றும் கற்பிக்கும் முறை, மொழிப் பாடம் முதல் தாள், மொழிப் பாடம் இரண்டாம் தாள் (ஆங்கிலம்) பாடங்களிலிருந்து தலா 30 மதிப்பெண்ணுக்கு கேள்விகள் கேட்கப்படும். கணிதம் மற்றும் அறிவியல், சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு அந்தந்தப் பாடங்களில் இருந்து மட்டும் தலா 60 மதிப்பெண்ணுக்கு கேள்விகள் கேட்கப்படும். பிற பாட ஆசிரியர்கள் இதில் ஏதேனும் ஒரு தாளை தேர்ந்தெடுத்து எழுதலாம்.
நாளை முதல் விண்ணப்பம்: தமிழகம் முழுவதும் உள்ள 66 மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் வியாழக்கிழமை (மார்ச் 22) முதல் தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. இதற்காக மொத்தம் 8 லட்சம் விண்ணப்பங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.இந்த விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து வழங்குவதற்கான கடைசி நாள் ஏப்ரல் 4 ஆகும். விண்ணப்பக் கட்டணம் ரூ.50.

ஆசிரியர் தகுதித் தேர்வு : முதல் தாள் பாடப்பிரிவு விவரம்

ast Updated : 23 Mar 2012 01:29:16 PM IST
பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுபவர்களுக்கு தேசிய மற்றும் மாநில அளவில் தகுதித் தேர்வினை நடத்தி, அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பணி வழங்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை அடுத்து, தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வான டிஎன் டிஇடி தேர்வு வரும் ஜூன் மாதம் 3ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பம் வழங்கும் பணி மார்ச் 22ம் தேதி துவங்கியுள்ளது. இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எந்தப் பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இந்த தேர்வு 5 பாடபிரிவுகளைக் கொண்டதாகும். 1. குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும், 2. தமிழ்/தெலுங்கு/மலையாளம்/கன்னடம்/உருது, 3. ஆங்கிலம், 4. கணிதம், 5. சுற்றுச்சூழல் படிப்பு ஆகிய பாடங்களின் கீழ் ஒவ்வொரு பிரிவிற்கும் தலா 30 கேள்விகள் கேட்கப்படும்.

பொதுவாக இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு அரசு பணி வாய்ப்பு வழங்கப்படும் என்பதால் தற்போது இத்தேர்வை எழுதும் ஆர்வம் அதிகரித்துள்ளது. 150க்கு 90 மதிப்பெண் அதாவது 60% மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி பெற்றவராக அறிவிக்கப்படுவர்.

1 முதல் 5ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் இந்த முதல் தாள் தேர்வினை எழுத வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாள் தேர்வெழுதுவோருக்கான பாடப்பிரிவு விவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது.

1. குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்,2. தமிழ்3. ஆங்கிலம்4. கணிதம்5. சுற்றுச்சூழல் படிப்பு

B.Ed admission notice