வட்டார செயல்பாடுகள் புகைப்படங்களாக உங்கள் பார்வைக்கு

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாகப்பட்டினம் மாவட்டம்

Wednesday 14 March 2012

14.03.2012 DINAMANI NEWS: தாற்காலிக பணி மாறுதல்களை ரத்து செய்யக் கோரி போராட்டம் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி



---------- முன் அனுப்பப்பட்டத் தகவல் ----------
அனுப்புநர்: thodakapalli asiriyar kootani nagapattinam <koottaninagapattinam@gmail.com>
தேதி: 14 மார்ச், 2012 10:54 pm
தலைப்பு: தாற்காலிக பணி மாறுதல்களை ரத்து செய்யக் கோரி போராட்டம் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி
பெறுநர்: 


 தாற்காலிக பணி மாறுதல்களை ரத்து செய்யக் கோரி போராட்டம் தொடக்கப் பள்ளி
ஆசிரியர்கள் கூட்டணி

First Published : 14 Mar 2012 03:16:53 PM IST

 நாகப்பட்டினம், மார்ச் 13: நாகை மாவட்டத்தில் கல்வியாண்டின் இறுதியில்
ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தாற்காலிக பணி மாறுதல்களை ரத்து செய்யக்
கோரி, தொடர் போராட்டங்கள் நடத்த தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள்
கூட்டணி திட்டமிட்டுள்ளது.
 தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் நாகை மாவட்டக் கிளை
வட்டாரச் செயலர்கள் கூட்டம், நாகையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
 சங்கத்தின் மாவட்டத் தலைவர் ப. முருகபாஸ்கரன் தலைமை வகித்தார். மாநிலத்
துணைத் தலைவர் ரா. முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
 மாநிலச் செயற்குழு உறுப்பினர் கோ. ராமகிருஷ்ணன், மாநிலப் பொதுக் குழு
உறுப்பினர்கள் சி. பிரபா, தங்க. மோகன், பி. பன்னீர்செல்வம், மாவட்டத்
துணைத் தலைவர் இரா. நீலா புவனேஸ்வரி, மாவட்டத் துணைச் செயலர் மா.
சித்தார்த்தன் மற்றும் அனைத்து வட்டார செயலர்கள், தொடக்கப் பள்ளி
ஆசிரியர் கூட்டணியின் ஓய்வு பெற்றோர் பிரிவு பொறுப்பாளர்கள் கலந்து
கொண்டனர்.
 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
 நடுநிலைப் பள்ளிகளுக்கு சிறப்பு ஆசிரியர்களை நியமித்த தமிழக அரசுக்கு
பாராட்டுத் தெரிவிப்பது. அனைத்து நடுநிலைப் பள்ளிகளுக்கும் சிறப்பு
ஆசிரியர் பணியிடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
 கல்வித் துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.
தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் தாற்காலிக பணி மாறுதல் வழங்காத போது,
நாகை சரகத்தில் மட்டும் கல்வியாண்டின் இறுதியில் ஆசிரியர்களுக்கு
தாற்காலிக பணி மாறுதல் வழங்கப்படுகிறது. இவற்றை ரத்து செய்யக் கோரி,
தொடர் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.
 மாவட்டச் செயலர் மு. லட்சுமிநாராயணன் வரவேற்றார்.


--
பார்வை :www.testfnagai.blogspot.com
அன்புடன்

தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை



--
பார்வை :www.testfnagai.blogspot.com
அன்புடன்

தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை

தாற்காலிக பணி மாறுதல்களை ரத்து செய்யக் கோரி போராட்டம் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி

தாற்காலிக பணி மாறுதல்களை ரத்து செய்யக் கோரி போராட்டம் தொடக்கப் பள்ளி
ஆசிரியர்கள் கூட்டணி

First Published : 14 Mar 2012 03:16:53 PM IST

நாகப்பட்டினம், மார்ச் 13: நாகை மாவட்டத்தில் கல்வியாண்டின் இறுதியில்
ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தாற்காலிக பணி மாறுதல்களை ரத்து செய்யக்
கோரி, தொடர் போராட்டங்கள் நடத்த தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள்
கூட்டணி திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் நாகை மாவட்டக் கிளை
வட்டாரச் செயலர்கள் கூட்டம், நாகையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் ப. முருகபாஸ்கரன் தலைமை வகித்தார். மாநிலத்
துணைத் தலைவர் ரா. முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
மாநிலச் செயற்குழு உறுப்பினர் கோ. ராமகிருஷ்ணன், மாநிலப் பொதுக் குழு
உறுப்பினர்கள் சி. பிரபா, தங்க. மோகன், பி. பன்னீர்செல்வம், மாவட்டத்
துணைத் தலைவர் இரா. நீலா புவனேஸ்வரி, மாவட்டத் துணைச் செயலர் மா.
சித்தார்த்தன் மற்றும் அனைத்து வட்டார செயலர்கள், தொடக்கப் பள்ளி
ஆசிரியர் கூட்டணியின் ஓய்வு பெற்றோர் பிரிவு பொறுப்பாளர்கள் கலந்து
கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
நடுநிலைப் பள்ளிகளுக்கு சிறப்பு ஆசிரியர்களை நியமித்த தமிழக அரசுக்கு
பாராட்டுத் தெரிவிப்பது. அனைத்து நடுநிலைப் பள்ளிகளுக்கும் சிறப்பு
ஆசிரியர் பணியிடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
கல்வித் துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.
தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் தாற்காலிக பணி மாறுதல் வழங்காத போது,
நாகை சரகத்தில் மட்டும் கல்வியாண்டின் இறுதியில் ஆசிரியர்களுக்கு
தாற்காலிக பணி மாறுதல் வழங்கப்படுகிறது. இவற்றை ரத்து செய்யக் கோரி,
தொடர் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.
மாவட்டச் செயலர் மு. லட்சுமிநாராயணன் வரவேற்றார்.


--
பார்வை :www.testfnagai.blogspot.com
அன்புடன்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை